கிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா ?

.

இங்கிலாந்துக்கெதிரான நாலாவது டெஸ்ட் மேட்ச் நாளை (30-8-1918) தொடங்குகிறது. தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான 18-பேர் கொண்ட அணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்கமிட்டி இரண்டு பேர்களை தூக்கிவிட்டார்கள் -துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

முதல் இரண்டு போட்டிகளில் பிட்ச்சுகள் இருந்த லட்சணம், ஒவ்வொரு நாளிலும் விடாது விரட்டிய மழை, நம் வீரர்கள் (விராட் கோலி தவிர்த்து) விளையாடிய அழகு என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை முழுதுமாக ஆராய்ந்தால் உண்மையான படம் தேர்வுக்கமிட்டிக்குத் தெரிந்திருக்கும். அப்படியில்லாமல், தோல்விக்கு என்னவோ அவர்தான் காரணம் என்பதுபோல், இந்தியாவின் நம்பர் 1 துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யை மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து நீக்கியதோடு, மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலிருந்தும் அவரைக் காவு வாங்கியிருப்பது சரியில்லை. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் (Trent Bridge)-ல் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் அவர் ஆடியிருந்தால், பிட்ச் பேட்ஸ்மன்களுக்கு சரியான ஆடுகளமாக அமைந்திருக்கையில், மற்றவர்களைப்போல் அவரும்தான் அடித்திருப்பார். நல்ல பிட்ச்சில் வாய்ப்பு தராமல், தொடரிலிருந்தே ஒருவழியாகக் கழட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது. குல்தீப் யாதவையும் அவருக்கு ஒத்துவராத பிட்ச்சில் ஆடச்செய்து, இப்போது ஒரேயடியாகத் தூக்கிவிட்டார்கள். என்ன லாஜிக் இது ?

சரி, உள்ளே வந்திருக்கும் இளம் வீரர்கள்? துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா (Prithvi Shaw) மற்றும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான ஹனுமா விஹாரி (Hanuma Vihari). (இன்னும் கொஞ்ச நாட்களில் நமது தமிழ் மீடியா அவரது பெயரை ஹனுமான் விகாரி என்றோ அல்லது அனுமார் விகாரி என்றோ குறிப்பிடலாம். அதிர்ச்சியடையாதீர்கள்! எல்லாம் அனுமார் செயல் என்று பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் கவனிக்கவேண்டியது கிரிக்கெட்டை!) இருவரும் திறனான பேட்ஸ்மன்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல்தர (First Class matches) மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இந்திய மற்றும் வெளி நாட்டணிகளுக்கெதிராக விளாசியவர்கள். வாய்ப்பு கிடைத்தது சரிதான்.

இருவரில் ஒருவரான 24-வயது ஹனுமா விஹாரி இந்திய ரஞ்சி ட்ராஃபி போட்டிகளில் ஆந்திராவுக்காக நல்ல சராசரியுடன் அருமையாக ஆடிவருபவர். ஐபிஎல் –இல் பெரிதாக சோபிக்கவில்லை எனினும் கடந்த சில வருடங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டணிகளுக்கெதிராக சிறப்பான திறமை காட்டி ஆடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன். ஒருவேளை, கோஹ்லி காயம் காரணமாக ஆடமுடியாது போனால், அவருக்குப் பதிலாக இருப்பில் இருக்கட்டும் என இவர் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (அணியின் பெஞ்சில் கருண் நாயரும் உட்கார்ந்திருக்கிறார்).

இரண்டாவது புதுமுகமான ப்ரித்வி ஷா மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் எனத் தோன்றுகிறது. சிறுவனாக, பள்ளிக்கூடக் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் சாதனைகளை நிகழ்த்தி தூள் கிளப்பியவர். எட்டு வயது சிறுவனாக இருக்கும்போது மும்பையில், சச்சின் டெண்டுல்கரால் கவனித்துக் குறிப்பிடப்பட்ட இளம் புயல். வரனாக வந்திருக்கும் திறன் (Prodigious talent) என்பதாக வர்ணிக்கப்படும் 18 வயது ஷா, வேகப்பந்துகளை லாவகமாக, துல்லியமாக ஆஃப் சைடில் திருப்புதல், அழகான கவர் ட்ரைவ்கள் என சிறப்புத்திறன் காண்பித்துவருபவர். இந்தியாவின் Under-19 உலகக்கோப்பை அணியின் கேப்டனாகத் தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக (சதம்-188 ரன்) என அபாரமாக ஆடிய பேட்ஸ்மன். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காகவும், அதிரடி டி-20 ஆட்டமான ஐபிஎல்-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் கடந்த சீசனில் நன்றாக விளையாடியிருக்கிறார் என்பதும் அவரது பலம். சில வல்லுனர்களால் டெண்டுல்கர், கோஹ்லிக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய திறன்மிகு பேட்ஸ்மன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஷா. ஒரேயடியாக காத்திருக்க வைக்காமல், 18 வயதிலேயே, நல்ல ஃபார்மில் இருக்கையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்படி ப்ரித்வி ஷாவை புத்திசாலித்தனமாக 18-பேர் கொண்ட அணியில் சேர்த்துவிட்டு, கடைசியில், நாளை துவங்கவிருக்கும் 4-ஆவது டெஸ்ட்டிலோ, கடைசி டெஸ்ட்டிலோ அவரை ஆட விடாமல் வேடிக்கை பார்க்கும்படி பெஞ்சில் உட்காரவைத்தால், அது அடிமுட்டாள்தனமாக இருக்கும். தவன் அல்லது ராஹுல் – இருவரில் ஒருவரது இடத்தில் நாளைய டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா விளையாடவேண்டும். அதுதான் அணிநலனுக்கான சிறந்த முடிவாக இருக்கும். கோஹ்லி செய்வாரா?

நாளைய டெஸ்ட்டில் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது பச்சை நிற பிட்ச்! தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் ஆடியதுபோல் 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்குவாரா கோஹ்லி? அல்லது, அஷ்வின் அல்லது ஜடேஜா என ஒரு ஸ்பின்னரையாவது கைவசம் வைத்துக்கொண்டு உள்ளே வருவாரா? பார்ப்போம்..

*

வாஜ்பாயி என்றொரு கவிஞர்


சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தந்தைவழித் தாத்தா, மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமஸ்கிருத அறிஞராக இருந்தவர். அப்பா பண்டிட் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயி ஹிந்தி மொழியின் கவிதை உலகில் தனக்கென இடம் அமைத்துக்கொண்ட கவிஞர். தேசபக்தர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். வாஜ்பாயி கான்பூர் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தபோது, பணிஓய்வுபெற்றிருந்த அவருடைய தந்தையும் நானும் சட்டம் படிக்கிறேன் என்று அதே காலேஜில், அதே வகுப்பில் சேர்ந்துகொண்டார். அப்பாவும் பிள்ளையும் க்ளாஸ்மேட்ஸ்!

இதிகாசம், புராணமென தந்தையிடம் கதைகள்பல கேட்டிருந்த வாஜ்பாயி, இந்து மதம், இந்தியக் கலாச்சாரம், தேசபக்தி, தியாகம் என இளம் பிராயத்திலேயே, உன்னத சிந்தனைகள் வாய்க்கப்பெற்றார். தன் பதின்ம வயதிலேயே சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புராணக் கதைளையும், நவீன காவியங்களையும் விரும்பிப் படிக்கத்தொடங்கியிருந்தார். ’ராம்சரித்மானஸ்’ என அழைக்கப்படும் துளசிதாசரின் ராம சரிதம் தன்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஹிந்தியின் புகழ்பெற்ற கவிஞர்களான ஜெய் ஷங்கர் ப்ரசாத்-தின் ’காமாயனி’, ’நிராலா’ என்கிற புனைப்பெயரில் எழுதிய சூர்யகாந்த் த்ரிப்பாட்டி-யின் ’ராம் கி ஷக்தி பூஜா’ (ராமனின் சக்தி பூஜை), மகாதேவி வர்மாவின் ’கீத்’ (கீதம்) ஆகிய நூல்கள் தன்னை மிகவும் வசீகரித்ததாகச் சொல்லியிருக்கிறார் வாஜ்பாயி.

வாஜ்பாயி இளம்பிராயத்திலேயே தன்னை ஒரு கவிஞனாகவே உருவகித்துக்கொண்டவர். பின்னர் காலப்போக்கில் தவிர்க்கவியலா மாற்றங்கள் நிகழ்ந்தன. கவர்ச்சிப்பேச்சாளர், அரசியல்வாதி என வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தி வேடிக்கை பார்த்தது. அரசியல்வாதியாக ஆகநேர்ந்த கவிஞர் என இவரைக் கொள்வதே சரி. அரசியல் சோர்வுகொடுத்த போதெல்லாம் தன்னிலிருந்தே பின்வாங்கியவர்போல், டெல்லியிலிருந்து விலகி, குலு மணாலியில் தனிவீட்டில் தங்கி இயற்கையை ரசிப்பதும், வாழ்வின் ஆழ்மடிப்புகளை உள்வாங்கியும் கவிதை வரைந்துகொண்டிருந்தார் அவர். வாஜ்பாயியின் கவிதைவெளி, இந்திய தேசம், இந்து தர்மம், வாழ்க்கை, மனிதனின் தனிமை, வீரம், துக்கம், மரணம் எனப் பலவாறு விரிந்து செல்கிறது. சமஸ்கிருதம், உருது ஆகிய வடமொழிகளின் வீச்சு, வார்த்தைசாகசங்கள் நிறைந்திருப்பன இவரது கவிதைகள். ’இலக்கியத்தின் உச்சபீடத்தில் என் கவிதை முயற்சிகள் வைக்கப்படுமா, இல்லையா என்பதை நானறியேன். ஆனால் என் கவிதைகள் என் வாழ்க்கையின் சாஸனங்கள்’ என்றார் வாஜ்பாயி.

மரணம், 30 வருடங்களுக்கு முன்பே, ஒருமுறை இவர் கதவைத் தட்டிச் சென்றிருக்கவேண்டும். 1988-ல் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாயி, நியூயார்க் மருத்துவமனையில் போராடியவாறிருந்தார். தான் தன் இறுதிக்காலத்தில் இருக்கிறோமோ என அவர் மனதில் சஞ்சலம். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மரணதேவன் தயங்கித் தயங்கித் தன்னை நெருங்குவதாக அவர் உணர்ந்திருப்பார்போலும். அப்போது வட இந்தியாவில் ‘தர்ம்யுக்’(Dharmyug) (தர்ம யுகம்) என்கிற பெயரில் ஒரு புகழ்பெற்ற ஹிந்தி வார இதழ் வெளிவந்துகொண்டிருந்தது (ஆங்கிலத்தில் ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’வுக்கு இணையாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் வெளியிட்ட ஹிந்தி வாரஏடு). மருத்துவமனையிலிருந்து, தன் நண்பரான அதன் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில், மெல்ல நெருங்கும் மரணம்பற்றித் தன்ன்னில் வெவ்வேறு நிலைகளில் தோன்றிய சிந்தனைகளை இப்படிக் கவிதையாக வடித்திருந்தார் வாஜ்பாயி. ’தர்ம்யுக்’ இதழில் அதற்கடுத்த வாரமே (டிசம்பர் 4, 1988) அது வெளியானது:

சாவோடு ஒரு யுத்தம்

எத்தகைய யுத்தமாக இருக்குமது!
மரணதேவனை சந்திக்கும் உத்தேசம்
ஏதுமில்லை எனக்கு
அந்தத் திருப்பத்தில் நாம் சந்திப்போம் என
முடிவுசெய்திருக்கவுமில்லை – இருந்தும்
வழிமறித்து விஸ்வரூபமெடுத்து
என்னெதிர் நிற்கின்றான் அவன்!

மரணத்தின் ஆயுட்காலம்தான் என்ன
ஒரிரு கணங்கள்தானே
இன்று நாளை என்பதையெல்லாம்
எளிதாகத் தாண்டிச் செல்லும்
பெரும் தொடர்ச்சி இந்த வாழ்க்கை
முழுதுமாக வாழ்ந்திருக்கிறேன் நான்
முடிய விரும்புகிறபடியே முடிவேன்
உயிரை விடுவதில் அச்சமில்லை
உயிர்த்தே மீள்வேன் நான்

**

பதுங்கிப் பதுங்கியே
நெருங்காதே எனை நீ
நேருக்கு நேர் எதிர்கொள்
சோதித்துப் பார்த்துவிடு என்னை

கருகரு கண்மையிட்டுக்கொண்டு
மயக்குகிறது மாலை
கனிவான புல்லாங்குழலிசையாக
காத்துக் கிடக்கிறது இரவு
சாவைப்பற்றியெல்லாம்
சதா நினைத்துக்கொண்டிராமல்
சாவகாசமாகச் செல்கிறது
வாழ்வின் பயணம்

**
நூற்றுக்குமேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் வாஜ்பாயி. ‘எனது 51 கவிதைகள்’, ’தன்னிரக்கமில்லை, தப்பித்தலுமில்லை’ போன்ற தலைப்புகளில் ஹிந்தியில் பல கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதில் ’எனது 51 கவிதைகள்’ கவிதைத்தொகுதி மிகவும் புகழ்பெற்றது. 1995-ல் வாஜ்பாயியின் நண்பரான பிரதமர் நரசிம்மராவினால் டெல்லியில் வெளியிடப்பட்ட அதன் முன்னுரையில் வாஜ்பாயி எழுதுகிறார்: ’கவிதை என்பது தந்தைவழி வந்து சேர்ந்திருக்கிறது என்னிடம். என்னுடைய அரசியல் பாதையானது, என்னிலிருந்து கவிதாரசம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு தடங்கலாகவே இருந்திருக்கிறது.’ 12 மறுபதிப்புகள் கண்டதோடு, பல்கேரிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் இது. இவையன்றி ’வாஜ்பாயியின் 21 கவிதைகள்’ எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கில மொழியாக்கமாக, ஒரு தனிநூலாக (Penguin Global) வெளிவந்திருக்கிறது.

ரசமான கவிதைகள் சில, வெவ்வேறு காலகட்டங்களில் அவரின் விதவிதமான மனவோட்டத்தைக் காட்சிப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன:

தவிர்க்கவியலாதது

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போரும் நாளை
இல்லாது போய்விடலாம்
இருப்பதும் இல்லாதிருப்பதுமான நிகழ்வு
இப்படித்தான் நடந்துகொண்டே இருக்கும்
நாம் இருக்கிறோம்
நாம் இருப்போம்
என்கிற பிரமையும்
எப்போதும் திரும்பத் திரும்ப
எதிர்வந்தவாறேதான் இருக்கும்

**

அடுத்தவரின் பார்வையிலேதான்
பார்த்துக்கொள்கிறேன் என்னையே நான்
வாயை மூடிக்கொண்டுமில்லை
வாயாறப் பாடிக்கொண்டுமில்லை
**
மற்றவர்களிடம் நெருங்கிப் பழகவியலா
மலையுச்சியில் எனைத் தூக்கி வைத்துவிடாதே
வேண்டாம் அந்த வேதனையெல்லாம் எனக்கு

**
அதுமட்டும்

பாழாய்ப்போன பணயத்தில்
எல்லாவற்றையும் வைத்தாயிற்று
நிறுத்த முடியாது எதையும் இனி
உடைந்து நொறுங்கினாலும்
நொறுங்கிவிடலாம் – ஆனால்
தலைகுனிந்து நிற்பதென்பது
நடக்கவே நடக்காது

**

புதுப்பாடலைப் பாடுகின்றேன்

நொறுங்கிப்போன கனவுகளின்
விசும்பல் சப்தத்தை
யார் கேட்கப்போகிறார்கள்
விரிகின்றன மூடிய இமைகளுக்குள்
விரிசல்தட்டிய மனதின் சோகக்காட்சிகள்
இருந்தும் தோல்வியை ஏற்கமாட்டேன்
அவமானத்தை எதிர்கொள்ளமாட்டேன்
காலத்தின் கபாலத்தில் எழுதப்பட்டதையும்
அழிப்பவன், திருப்பி எழுதுபவன் நான்
புதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன் – தினம்
புதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன்

**

எவ்வழி?

நஷ்டங்களே ஆதாயமாய்
ஒரு சூதாட்ட வாழ்க்கை
இரண்டுநாள் அவகாசந்தான்
இலவசமாகத் தரப்பட்டிருக்கிறது
இதில் க்ஷணம் க்ஷணமாகக்
கணக்கெடுக்கவா- இல்லை
எஞ்சியிருப்பதையெல்லாம்
அப்படியே தந்துவிடவா
எந்தவழி செல்லட்டும் நான்?

**
அரசியல் வாழ்விலும் பண்பட்ட மனதின் சிந்தனை, பதற்றமாக அவரிடமிருந்து வெளிப்படுகிறது வேறொரு இடத்தில்:

காந்தி மகாத்மாவே
மன்னித்துவிடுங்கள்
வாக்குறுதியை மீறிவிட்ட
படுபாவிகள் நாங்கள்
சென்றுசேரவேண்டிய இலக்கை
மனம் மறந்து நாளாகிவிட்டது
பயணமும் பாதியிலேயே
நின்றுபோய்விட்டது

**

நாட்டின் அரசியல், சமூக அபத்தங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கிறது வாஜ்பாயியின் கீழ்வரும் கவிதை:

இன்றைய மகாபாராதம்

பாண்டவர் யார்
கௌரவர் யார்
கேள்வியே கோணலானது
இரு தரப்பிலுமாகப் புகுந்து
சதிராட்டம் போடுகிறானே சகுனி
எல்லாச் சபைகளிலும்
இடைவிடாது நிகழ்கிறதே
திரௌபதிக்கான அவமானம்
கிருஷ்ணன் இல்லாமலே
நடக்கவிருக்கிறது
மகாபாரத யுத்தம்
யார் வேண்டுமானாலும் இதில்
வென்றுவிடலாம்
ராஜாவாகலாம்தான் – ஆனால்
பிரஜைகளென்னவோ
அழுதுதான் ஆகவேண்டும்

*
படம்: இணையத்திலிருந்து; நன்றி.

SRI ANDAL

In the Vaishnava Bhakti traditions of South India, with particular reference to Tamil Nadu, there are 12 Aazhwaars (Poet-Saints), who dedicated their entire lives to Lord Narayana or Maha Vishnu. ‘Aazhwaar’ in Tamil means ‘one who immerses himself in’- here, the one who is forever immersed in the thoughts of the Lord. Worldly life and its tantalizing charms never mattered to them. They travelled all over India by foot, visiting Vishnu temples, singing the praise of the presiding deity in such places. Among the Aazhwaars, only one is a lady-saint. She is Andal (pronounced Aandaal).

In the erstwhile Pandya Kingdom of Tamil Nadu, in the period 8-9th Century AD, in a place called Srivilliputhur (near Madurai), lived a Vaishnavite Saint, and Vedic scholar by the name of Vishnuchittar (the person whose ‘chit’- mind is nothing but Lord Vishnu) (later on, he was reverently called Periyaazhwaar-one of the 12 Aazhwaars referred above). Reciting poems and singing hymns on Lord Narayana (Maha Vishnu), he used to do pujas at the nearby Vishnu temple. In a wordly way, there was a longing in him for a child, as he didn’t have one. One day in the nandavanam (garden) of the temple, surrounded by Tulasi plants, he saw one female infant lying on the ground, playing with itself moving its arms and legs in the joy of innocence. Vishnuchitthar was thrilled beyond belief. He felt it was the Lord’s gift for him and lovingly lifted the child and took her home. He gave the infant the name ‘Andal’ (Aandaal) and she, as time passed by, grew into a lovely child.

Childhood: Andal was brought up by Vishnuchithar in very religious, pious surroundings. From a tender age, she started listening passionately to the hymns and songs soulfully sung by her father. As there were a lot of references to Lord Krishna or Sriman Narayana in the songs, she got curious and asked her father many intriguing questions about the most charming Lord. Vishnuchithar was quite happy to tell innumerable stories from Srimad Bhagavatam and Puranas about the leelas of Krishna and his captivating lifestyle. Andal was glued to the stories of Krishna and the Lord grew in her tender heart blissfully. She was so mesmerized by the thoughts of Krishna, soon she started visualizing Him as her lover and dwelt in His thoughts all day.

Andal as a child, was also learning from her father, ancient scriptures and puranas. Remaining glued to her father at home, she assisted him in the nithya karmas, especially in regard to his pujas at home and the Lord Vadabhadrasayee (as Lord Krishna is called in Srivilliputhur) temple nearby. Vishnuchithar used to pluck fresh Tulsi leaves from his garden everyday and weave a nice garland for the Lord in the temple. As she was a child, he did not take his daughter to the temple.

Looking at the lovely green garland, Andal was in the habit of wondering how nice this garland would be on the Lord. As she started imagining herself as the bride for Lord Krishna, she wanted to see how beautiful she would look in the eyes of her Lord, with a garland around her neck! Without her father’s knowledge, she used to take the garland, wear it herself and look at her in the mirror. She was amused and delighted with her looks with a fragrant Tulsi garland on her tender figure. Before her father returns from his daily core, she would put the garland carefully back in the flower basket meant for the temple and move away. This was happening everyday. Vishnuchithar, without any knowledge of the happenings at home, carried the garland to the temple and offered it to the Lord. The Lord was accepting the garland as gracefully as ever. One day, Andal was adorning the garland and was looking at herself in the mirror. For a moment, she thought, she saw her Krishna only in the reflection. Her eyes became wet and she was engrossed in the thoughts of her Beloved.

At that time, Vishnuchithar entered the room and saw what his daughter was doing. He became livid and screamed at Andal: ‘This is meant for the Lord! Stupid girl, how did you dare to wear this yourself!’ Rattled, she at once removed the garland and kept it aside and ran towards a corner of the house. ‘Don’t ever try to touch such things in future!’ thundered Vishnuchithar and left. Andal was badly shaken, as she had never ever heard her father shout at her. Sitting in a corner, her face down on her knees, she uncontrollably sobbed in silence.

Vishnuchithar himself became very disturbed. He thought something had gone terribly wrong that day. He had no other Tulsi mala for the Lord, for that day. How would he go to the temple and stand before Him? He did not touch his food for that day and went into a long meditation praying for the Lord’s forgiveness.

Lord’s intervention: In the disturbing night that followed, he could hardly get a wink of sleep. Before early dawn, when he dozed off for a while, Lord Krishna appeared in his dream and asked him rightaway: ‘Why didn’t you bring the garland for me yesterday?’ As Vishnuchithar fumbled and mumbled knowing not what to say, the Lord said: Vishnuchitha! Listen. I want only the garland, Andal put on herself!  I would prefer it like that everyday..Do not stop what she is doing. And don’t ever think, she is just a mortal!’ The Lord disappeared.

On waking up, Vishnuchithar could not believe what transpired in the dream. That was surely no ordinary dream! It was so vivid in his memory and he knew it was his Lord who graced him, showing the way to come out of his agony. He was in tears. Wiping his tired face, he got up and went around looking for his flower-like daughter. Andal who also got up early, was there somewhere in the house. He found her exhausted, eyes downcast, trying to avoid her angry father. As Vishnuchithar remembered what the Lord has told him about her, he trembled a little. Still he thought, Oh, she is my dear daughter.. He slowly approached her and touched her head softly. He said : ‘Andal, my baby, had I frightened you? I scolded you too much, I shouldn’t have..I regret it my child..’ Andal broke in tears and sobbed in his affectionate arms. Vishnuchithar consoled her and told that he wouldn’t be annoyed with her anymore and she can try the garland on herself, before he takes it to the Lord. Andal was pleasantly surprised by the development. She smiled at her father and went around happily.

Vishnuchithar went to the room where Andal had left the garland, the previous evening. To his bewilderment, he saw the garland had not faded a bit, but appeared fresher and greener than ever, dazzling in sight. It is all His leela! – he explained to himself. At the same time, he began to understand the divine power residing in his tender daughter. After his daily chores at home, he took that garland happily to the temple and dutifully offered it to Lord Krishna who gave his nod in the form of a blissful smile.

Andal’s eternal love: As the days passed by, Andal grew lovelier and attained the marriageable age (In those times, for girls it was anywhere between 10 to 14 or 15 years of age, in general). As a father, Vishnuchithar was worried that he should find a suitable groom for his adorable daughter. When he opened the subject with Andal one evening, she made it clear to her father that there was no one for her in this world, other than Lord Krishna Himself! Vishnuchithar tried hard to explain and pleaded with her about the reality of this world. ‘No!’ she said firmly. ‘If at all there is a wedding for me in this life, it will only be with Him!’ Her father was baffled, but by then knew how stubborn his daughter could be. Alas, he didn’t know what to do.

After long wavering thoughts, Vishnuchithar called his daughter and told: ‘Lord Narayana has manifested himself in various forms in many places. In 108 Divya Desams (Holy Vaishnavite shrines, sung in hymns of praise by the Aazhwar saints) all over the country. I would describe, to the best of my knowledge, all the Kalyana Gunas (beauteous divine qualities) about the deities residing in such places of pilgrimage. From these, you choose that one form – that is for you!’ She nodded in agreement and started listening. Her father started narrating the divine stories of Lord Vishnu, one by one, in 108 Vaishnava Kshethras. When at last, he commenced describing the divine grace and extraordinary beauty of Lord Ranganatha of Srirangam (near Trichy in Tamil Nadu), tears started slipping down from the eyes of Andal. She understood. She at once prayed to Lord Krishna in the form of Lord Ranganatha to accept her in wedlock and take her with Him at the earliest.

Divine union: It became clear to Vishnuchithar also. But how to go about this extraordinary situation? He, as a devotee of the Lord knew that He alone can solve this. Vishnuchithar meditated and earnestly prayed for the Lord’s kindness in accepting his innocent daughter as his bride. In the following night, Lord Ranganatha appeared in his dream and told him: ‘Vishnuchitha! Andal is not only your daughter but she is Bhooma Devi herself. Please bring her in royal style in a palanquin to my temple. I will accept her as my Devi’. Similarly, He also appeared in the dreams of the sthanikas (temple officials in charge) of Srirangam temple to go to Srivilliputhur and bring Andal in a royally decorated Pallakku (palanquin).

Arrangements were made accordingly in Srivilliputhur and Srirangam. Periyaazhwaar (Vishnuchithar) was delighted beyond description. He was all praise for the Lord. On an auspicious day, Andal was taken in a palanquin (pallakku in Tamil, palki in Hindi) to Srirangam with a lot of pious devotees accompanying. It is believed that King Vallabha Deva of that region, who was a staunch devotee of Lord Ranganatha, on hearing about this from his Minsters and advisers, rushed to Srivilliputhur to accompany Andal in a colourful royal procession to Srirangam. He ordered the route from Srivilliputhur to be fully guarded and elaborately decorated.

On arrival in Srirangam, the holy shrine where Lord Ranganatha resides, Andal was taken ceremoniously into the temple with full temple honour. She was greatly excited all along, feeling the Blissful Grace of the Lord, her adorable Krishna, her Narayana as she entered the Garba-graha.(Sanctum sanctorum of the temple). Emotionally charged, she took the breath-taking beauty of Lord Ranganatha in her teary eyes, in her heart of innocence and gracefully bowed before her Lord. As others kept a respectful distance and watched in silence, Andal in great eternal love for the Lord, moved gracefully towards the Lord. As she neared Him, a sudden burst of indescribably pure, lustrous light engulfed the space for a period of timeless wonder. Nothing existed except the Divine Grace itself. When the blissful bright light slowly withdrew itself after a while, the devotees in the temple could see only Sri Ranganatha smiling at them with all His eternal splendour. Periyaazhwar’s(Vishnuchithar) daughter Andal had merged with her Lord to be one of His divine consorts.

Ever since, Sri Andal is worshipped in Tamil Nadu as the incarnation of Mahalakshmi. Apart from Srivilliputhur, there are separate sannidhis for her in some of the important Vishnu temples. The Hoysala Kings had also built a temple for Sri Andal in Belur in Karnataka.

Bhakti poetry: Before her divine wedlock and eternal union with the Lord of her heart, that is, before she was hardly 13-14 years old, Andal, who was revered later on as an Aazhwaar herself, had written two wonderful collections of Bhakti Poetry in Tamil. They are also well-known in the literary world for their high-quality poetry. One is called Thiruppaavai, consisting of 30 paasurams (divine verses). In this, Andal portrays in beautifully written poems, her heart-felt desire to serve Lord Vishnu. She also describes elaborately the religious vows (thiruppavai) she and her friends should observe to achieve their divine goals. Thiruppavai refers to the importance of moral and ethical values and dwells in pure love and un-erring devotion for the Lord to reach His lotus feet. It is sung in Vishnu temples in Tamil Nadu in the early mornings of the holy month of Maargazhi (Dec 16- Jan 14). A song is assigned for each day and sung in front of the Vishnu deity throughout the month, seeking the Lord’s blessings.

Her other Bhakti work is titled ‘Naachiaar Thirumozhi’ (Sacred Sayings of the Goddess) (143 verses). This poetic collection portrays the agony of separation and the eternal longing of Andal for her beloved. Drawing stories of Krishna from the Sasthras and Puranas, Andal weaves powerful landscapes of imagery and beauty, which is perhaps unheard of in Indian divine writings. Her sensational writing explores the depth and sensitivities of the heart of a young woman in unbearable love for her celestial lover.

These divine masterpieces of Sri Andal penned elegantly in Tamil, have been translated into Kannada, Telugu, Gujarati, Hindi, English and French.

Other masters on Andal: Sri Ramanuja, the greatest among Vaishnava Acharyas, has written a commentary on Andal’s Thiruppaavai in Sanskrit.

Sri Vedantha Desika, the revered poet-saint of the Tamil Vaishnavite tradition and an erudite Vedic scholar of the 13th Century had written ‘Goda Sthuti’ in Sanskrit glorifying the life of  Andal. He refers to Andal’s Thirupaavai as ‘Goda Upanishad’ in his works. (Goda Devi, Naachiyaar being other names for Sri Andal).

King Krishna Devaraya of Vijayanagara Empire (16th century) who, in spite of being a powerful warrior and King, was also a devotee of Lord Vishnu. He was well-versed in Sanskrit and Telugu and had written a treatise on Andal’s life in poetic form titled ‘Amuktha Malyatha’ (the one who adorned the garland before offering it to the Lord) in Telugu.

Aekaanthan
**

அஜித் வாடேகர்

இந்திய கிரிக்கெட் என்றால் ரசிகர்கள் – குறிப்பாக ரசிகர்களில் இளைஞர்களும், முது இளைஞர்களும், 1983-ல் நாம் பெற்ற முதல் உலகக்கோப்பையைப்பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கூடவே, கபில்தேவ் என்பார்கள். அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி என்று கதைத்துச் செல்வார்கள், கிரிக்கெட்டின் பரிசுத்த வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்பற்றி ஓரளவு அறிந்த அதிரசிகர்களுக்கு –இதில் மத்திம வயதுக்காரர்கள், சீனியர் சிட்டிஸன்கள் அதிகம்- வருடம் 1971 இந்திய கிரிக்கெட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பது தெரிந்திருக்கும். அதைப்பற்றியெல்லாம் யாராவது காதுகொடுத்துக் கேட்க விரும்பினால், அவரை விடமாட்டார்கள். விரட்டி விரட்டிக் கதை சொல்வார்கள்!

வெளிநாடுகளில் போய்த் தோற்றுவிட்டு வருவதே வாடிக்கை என்றாகிவிட்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணிக்கு அப்போதெல்லாம். (இப்போதும் அப்படித்தான் என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது – நம்பிக்கை இழக்காதீர்கள், பொறுமை காட்டுங்கள் என்கிறார் கோஹ்லி!) 1971-ல் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இரட்டை டூர்களுக்காக, பட்டோடியிடமிருந்து கேப்டன்சியைப் பெற்றுக்கொண்ட அஜித் வாடேகரைப்பற்றி இந்தியா பெரிதாக அப்போது அறிந்திருக்கவில்லை. சரி, இன்னுமொரு மும்பைக்கர், வேறென்ன புதுசாக எனவே நினைத்திருந்தார்கள். அப்போதிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிபற்றி கூகில்பண்ணிப் பார்த்தால் தெரியும் – எப்பேர்ப்பட்ட புலிகள், சிங்கங்கள் இருந்தன எனப் புரிந்துவிடும். ஸர் கார்ஃபீல்ட் ஸோபர்ஸ் (Sir Garfield Sobers)-ஐக் கேப்டனாகக்கொண்ட அணியில் ரோஹன் கன்ஹாய் (Rohan Kanhai), ராய் ஃப்ரெடெரிக்ஸ் (Roy Fredericks), க்ளைவ் லாய்டு (Clive Lloyd) போன்ற அசகாய சூரர்கள் பேட்ஸ்மன்களாக ஆடினர். லான்ஸ் கிப்ஸ் (Lance Gibbs) ஷில்லிங்ஃபோர்டு (Shillingford), ஹோல்டர் (Holder) போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டு தாக்கியது வெஸ்ட் இண்டீஸ். ஐந்து டெஸ்ட் மேட்ச்களைக்கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரை வாடேகர் தலைமையிலான இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வென்று இந்திய ரசிகர்களைத் திக்குமுக்காடவைத்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரண்டாவது டெஸ்ட்டில் வென்ற இந்தியா, மிச்சமுள்ள 4 போட்டிகளை ‘டிரா’ ஆக்கி வலிமையான வெஸ்ட் இண்டீஸைக் காலி செய்தது. தொடரில், இந்தியத் தரப்பில் முதன்முறையாக டெஸ்ட் ஆடவந்த சுனில் கவாஸ்கர் சதம் மாற்றி சதமாக விளாசி வெஸ்ட் இண்டீஸை கதிகலங்க வைத்தார். கூடவே சர்தேசாயின் பேட்டிங்கும் அபாரம். (நினைவில் கொள்ளுங்கள்: அப்போதெல்லாம் பேட்ஸ்மன்கள் ஹெல்மட் அணிவதில்லை). பௌலிங்கில், இந்திய இளம் ஸ்பின்னர்களை வெளிமண்ணில் திறம்படக் கையாண்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த பெருமை கேப்டன் அஜித் வாடேகரையே சாரும். ப்ரசன்னா, வெங்கட் ராகவன், பிஷன் சிங் பேதி என மாற்றி மாற்றி இயக்கி வெஸ்ட் இண்டீஸின் முதுகைப் பிரித்தார் வாடேகர். கூடவே ஃபீல்டிங்கில் அஜித் வாடேகர், ஏக்னாத் சோல்கர், சையத் ஆபித் அலி, ஜெய்சிம்மா போன்றோர் அசத்தினர். ஃபீல்டிங்குக்காக மட்டுமே எந்த ஒரு சர்வதேச அணியிலும் விளையாடும் தகுதிபெற்றவர் அவர் என சோல்கரை ஆஸ்திரேலியர்கள் பிற்பாடு புகழ நேர்ந்தது. இத்தகைய சூப்பர் அணியாக அங்கிருந்து இங்கிலாந்து சென்றது இந்தியா.

ஆனால் இங்கிலாந்தோ இந்தியாவை ஒரு சீரியஸான டெஸ்ட் அணியாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ குருட்டாம்போக்கில் ஒரு மேட்ச் ஜெயித்துவிட்டு வந்திருக்கிறார்கள் பாவம், என்றே வாடேகரின் அணியைப்பற்றி நினைத்து அலட்சியப்படுத்தியிருந்தது இங்கிலாந்து. ரே இல்லிங்வர்த் (Ray Illingworth) தலைமை தாங்கிய அந்த அணியில் ஜெஃப் பாய்காட் (Geoff Boycott), ஜான் எட்ரிச் (John Edrich), டெனிஸ் ஏமிஸ், கீத் ஃப்ளெச்சர் (Keith Fletcher), ஆலன் நாட்(Allan Knott), பீட்டர் லீவர் (Peter Lever) போன்ற திறனான வீரர்கள். மூன்று போட்டித் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட்டுகளை டிரா செய்த இந்தியா, லண்டன் ஓவலில் நடந்த மூன்றாவது போட்டியை அனாயாசமாக வென்று அசத்தியது. கவாஸ்கர், சோல்கர், ஃபரூக் இஞ்சினீயர், சர்தேசாய் போன்ற பேட்ஸ்மன்களும், சுழல்வீரர்களான சந்திரசேகர், பிஷன் சிங் பேதி, வெங்கட் ராகவன் ஆகியோரும் சிறப்புப் பங்களிப்பு செய்தனர். அதுவும் கடைசிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மிரண்டிருந்த இங்கிலாந்தின் மீது, சந்திரசேகர் எனும் சிங்கத்தை அவிழ்த்துவிட்டார் அஜித் வாடேகர். இங்கிலாந்து விரைவில் விழுங்கப்பட்டது! ஆறுவிக்கெட்டுகள் சந்திராவுக்கு. அவருடைய மேஜிக் இந்தியாவுக்கு தொடர்வெற்றியை முதன் முதலாக, இங்கிலாந்து மண்ணில் பெற்றுத் தந்தது. தேன் குடித்த நரியானார்கள் இந்திய ரசிகர்கள்! வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இரண்டையுமே தூக்கிக் கடாசி விட்டதா இந்தியா! ஆஹா, இதுவல்லவோ கிரிக்கெட் டீம். அடடா, என்ன மாதிரி கேப்டன்யா இந்த அஜித் வாடேகர் என்று புகழ்ந்து தள்ளியது ஒட்டுமொத்த இந்தியாவும். பாம்பே திரும்பிய இந்திய அணி தங்கள் வாழ்நாளில் அப்படி ஒரு வரவேற்பை, அதற்குமுன்னர் கண்டதில்லை.

அந்தச் சின்னவயதில் நான் ஆசை ஆசையாக சேர்த்துவைத்திருந்த விதவிதமான தபால்தலைகளில், ஒரு தபால்தலை விசேஷமாக, மரியாதையாக வைக்கப்பட்டிருந்தது. ’கிரிக்கெட் வெற்றிகள், 1971’ என்று தலைப்பிட்டு, 1971-ல் இந்திய அரசு வெளியிட்ட கரும்பச்சை நிற தபால்தலைதான் அது.

இடதுகை பேட்ஸ்மனாக மிடில் ஆர்டரில் இந்தியாவுக்காக விளையாடிய அஜித் வாடேகர், தன் ஓய்வுக்குப்பின் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் மானேஜராகவும், பயிற்சியாளராகவும்கூடப் பணியாற்றியிருக்கிறார். நல்லதொரு கிரிக்கெட் நிர்வாகி என்ற பெயரும் அவருக்கிருந்தது. உடல் நலம் குன்றியிருந்து நேற்று மும்பையில் மறைந்த வாடேகர், கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் ஒரு சிறந்த கேப்டனாக நினைவு கூறப்படுவார்.

**

முள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி

தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா? இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’முள்முடி’ எனும் கதை. நேர்மையான, அந்தக்கால பள்ளிக்கூட வாத்தியார் ஒருவரின் கதைமூலம், வாசகர்களை நெகிழவைக்கிறார் தி.ஜானகிராமன்.

தன் பள்ளி நாட்களில், மற்ற வாத்தியார்களைப்போல் கடனே என்று பாடம் நடத்திச் செல்லாமல், அடிக்காமல், அலட்டாமல், பள்ளிப்பிள்ளைகளை அன்போடும், அரவணைப்போடும் நடத்தி, மேலேற்றிவிட்டவர் அனுகூலசாமி. அமைதியான சுபாவம். வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும்னு பள்ளியில் மாணவர்களும், ஊரில் மற்றவர்களும் பேசக்கூடிய அளவுக்குப் பேரெடுத்தவர். இருந்தும் என்ன? எல்லா நல்ல விஷயங்களும்கூட ஒருநாள் முடிவுக்கு வந்தாகவேண்டுமே? அதுதானே இயற்கை அடிக்கடிச் செய்துகாட்டுவது? ஆயிற்று. அனுகூலசாமியின் ரிடையர்மெண்ட் நாளும் வந்தது. பள்ளிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார் அவர்.

அவர் பள்ளியிடமிருந்தோ, மாணவர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்த்தவரில்லை. இருந்தும் மாணவர்கள் விட்டுவிடுவார்களா? பள்ளியின் உபசரணை, வழியனுப்பு நிகழ்ச்சிதாண்டி, தாங்களும் தங்களுக்குப் பிடித்தமான வாத்தியாருக்காகச் செய்ய நினைத்தார்கள். தனியாகக் கொஞ்சம் பணம் சேர்த்தார்கள். ஊர்ப்பெரியவர்களோடு நாயனக்காரர் சகிதமாய் அவரை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டு, மாலைபோட்டு, பரிசு கொடுத்து அனுகூலசாமிக்கு மரியாதை செய்வித்தார்கள். எதுக்குப்பா இதெல்லாம் என்று அனுகூலசாமி உருகிப்போனார். தங்கள் பிரிய வாத்தியாரை வணங்கியபின், லைட்டுகளை அப்பறமா வந்து எடுத்துக்குறோம் சார் என்று சொல்லிவிட்டு ஒருவழியாக மாணவர்கள் விடைபெற்றுப்போனார்கள். வீட்டில் சிந்தனை வயப்பட்டு ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கும் அனுகூலசாமி.

தி.ஜானகிராமனின் வரிகளில் அந்தக் கட்டத்தைக் கொஞ்சம் பாருங்கள்:

“புஸ்ஸ்..’ என்று பெட்ரோமாக்ஸ் இரண்டும் சூன்யத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.
தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நாளைக்குப் புதன்கிழமை. ஆனால் அவருக்கு சனி, ஞாயிறு.. நாளை மறுநாள், அதற்கும் மறுநாள் – இனிமேல் எப்போதுமே சனி ஞாயிறுதான். பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.

ஊஞ்சல்மீது உட்கார்ந்து கொண்டார் அவர். பக்கத்தில் ஃப்ரேம் போட்ட ஏழெட்டு உபசாரப் பத்திரங்கள். ஒரு வெள்ளித் தட்டு. ஒரு பேனா. கடையில நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு லட்சம். நாலு கோடி பெறும் என்று சொன்னால் வீண் வார்த்தை. ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்.

கொர்னாப் பட்டையும், வெள்ளி நூலுமாக நாலைந்து ரோஜா மாலைகள் சுருண்டு கிடந்தன.

ஊஞ்சல் சங்கிலி இரண்டையும் பிடித்துக் கொண்டு நின்றாள் மகிமை. பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். இத்தனை மேளதாளங்களும், தழதழப்பும் தனக்கு் கிடைத்தாற்போல ஒரு பார்வை. ஒரு நிமிஷம். அவரைப் பருகிக் கொண்டு நின்றவள் சட்டென்று வாசலுக்குப் போய்க் கதவைத் தாழி்ட்டு வந்து மாலைகளை ஒவ்வொன்றாக அவர் கழுத்தில் போட்டு தோள்களைப் பற்றி முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

”என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லே. அதிர்ந்து சொன்னதில்லே” என்று மார்பில் தலையைச் சாத்திக் கொண்டாள்.

”உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக்கிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? ”

”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”

”வராமயா இருக்கும்?”

”வெளியிலே காமிக்கணும்”

”அதுக்குத்தான் பால்காரி, வேலைக்காரி எல்லாம் இருக்கறாங்க உனக்கு. நான் வேற கோச்சுக்கணுமா?”

”பள்ளிக்கூடத்திலே அடிக்காம, அதட்டாம இருக்கமுடியுமா?”

”இருக்கமுடிஞ்சுதே!”

பரவசமாகப் பார்த்துவிட்டு அவர் மீசையை இழுத்துவிட்டு ”காபி சாப்பிடறீங்களா?” என்று நகர்ந்து நின்றாள் மகிமை.

அவள் உள்ளே விரைந்தபோது, தன் பிராணனே இன்னோர் உடம்பு எடுத்து விரைவது போலிருந்தது. மேலே சுவரைப் பார்த்தார். முள்முடியுடன் அந்த முகம் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. நாலைந்து படம் தள்ளி இன்னொரு படத்தில், அதே முகம் ஓர் ஆட்டுச் சிசுவை அணைத்துக் கொண்டிருந்தது.

கண்ணுசாமி சொன்னது அப்படியே உண்மைதான். முப்பத்தாறு வருஷ உத்தியோகத்தில் ஒரு பையனைக்கூட அடிக்கவில்லை. அதட்டிப் பேசவில்லை அவர்.

சுபாவமே அப்படி. லூயிசா பிறந்து பள்ளிக்கூடம் சேர்ந்து ஆறுவயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக, வாத்தியாரிடம் அடி வாங்கிவிட்டது. அந்த வாத்தியார் ஸ்கேலால் அடித்தபோது சட்டைக்குள் இருந்த கோடைக்கட்டியின் மீது பட்டு… அப்பப்பா! – அன்று துடித்த துடி! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்துகொண்டார் அனுகூலசாமி. எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரை விலை கொடுத்தானே. அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான். அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு மூளி விழாமல் பிழைத்து விட்டது. இல்லாவிட்டால், பதவியை விட்டு ஓய்வு எடுக்கிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன் வீடுவரை கொண்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

காப்பிப்போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள் அவர் மனைவி. வாசலில் ஏதோ சத்தம். மனைவி போய்க் கதவைத் திறக்கிறாள். ஆறுமுகம்.. நாட்டாண்மைக்காரர் போன்று நடந்துகொள்ளும் வகுப்பின் ‘மூத்த’ பையன். கூடவே அவரிடம் படித்த இன்னொரு பையன்.. சின்னைய்யா. நாற்பது வயது மதிக்கத்தக்க, கழுத்தில், காதில், மூக்கில் ஒன்றுமில்லாத ஒரு பெண்ணும் அருகில் நிற்கிறாள். அனுகூலசாமி குழப்பத்தோடு பார்த்து, என்ன விஷயம் என்று கேட்கிறார் ஆறுமுகத்திடம். சின்னைய்யா பாக்கணும்னு சொன்னான் சார். இது அவனோட அம்மா என்று சொல்கிறான் அவன். அம்மா அனுகூலசாமியை வணங்குகிறாள். என்ன சின்னைய்யா என்று அவர் கேட்டும், ஒன்றும் சொல்லாது, தலைகுனிந்து அழுகிறான் சின்னைய்யா. துணுக்குறுகிறார் அனுகூலசாமி. என்ன பிரச்சினை? அவருக்கும் உடனே ஒன்றும் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது..

கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்திச்செல்கிறார் தி.ஜானகிராமன்? வாசியுங்கள் அன்பர்களே அவருடைய ‘முள்முடி’ சிறுகதை.

லிங்க்: https://azhiyasudargal.wordpress.com/2012/02/09/முள்முடி-தி-ஜானகிராமன்/

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

தி. ஜானகிராமனின் சிறுகதை ‘பஞ்சத்து ஆண்டி’ பற்றி:

வாழ்க்கையில் விழுந்த ஒரு மரண அடியில் நிலைகுலைந்துபோன ஒரு ஏழையின் கதை. தினமும் தறிபோட்டு நெய்து பிழைத்துவந்த சாதாரணத் தொழிலாளியின் குடும்பம். தொழில் திடீரெனப் படுத்தது. எல்லாம் போயேபோய்விட்டது. நன்னையனுக்கோ பிழைப்பதற்கென வேறெதுவும் செய்யத்தெரியவில்லை. நெசவு ஒன்றுதான் பரம்பரை பரம்பரையாகக் கைகொடுத்துவந்தது. யார் போட்ட சாபமோ அது கைவிட்டதோடு, எழுந்திரிச்சிப்போடா என்று சொல்லிவிட்டது. நேர்மையான, கண்ணியமான மனிதன் நன்னையன். இருந்தது எல்லாவற்றையும் விற்றுச் சாப்பிட்டாகிவிட்டது. இனி விற்க ஏதுமில்லை. கையில் காசில்லை. இருக்க இடமுமில்லை. யாரையும் போய்க்கேட்கும்படியான சூழலோ இல்லவே இல்லை. நல்ல மனைவியும் மூன்று சின்னக்குழந்தைகளும், திடீரென வாழ்வின் பெரும் சுமையாகி எதிரே கண்ணீரோடும் பசியோடும் நிற்கின்றனர். நன்றாக வாழ்ந்துவந்த குடும்பத்தைப் பார்த்து விதி தன் கோரப்பல் காட்டி வெடிச்சிரிப்புச் சிரித்தது. கதியற்றுப்போன குடும்பம், மூட்டை முடிச்சுகளுடன் ஆங்காங்கே, யார்யார்வீட்டுத் திண்ணைகளிலெல்லாமோ தங்கி பசிஇரவு கழித்து இலக்கின்றி அலைகிறது. நன்னையனும் பாவம், என்னதான் செய்வான்? எங்கு போவான் அவன்?

ஒரு திண்ணையிலிருந்து இரவு கழியுமுன் விரட்டப்பட்டு, தெருவின் ஒரு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் திண்ணையில் குடும்பத்தைப் படுக்கவைக்கிறான். பசியோடு சுருண்டுகிடக்கிறார்கள் மனைவியும் குழந்தைகளும். இவனுக்கோ தூக்கம் வரவில்லை. குழந்தைகள் எழுந்தால் பசிக்கிறது என்று அலறுமே! தானம் எங்கோ கிடைக்கிறது என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்டிகளின் கூட்டத்தோடுபோய் ஏதாவது வாங்கிவரச்சொல்கிறாள் மனைவி. தனக்கும் பிள்ளைகளுக்கும் வயிற்றில் காற்றுதான் இருக்கிறதென்றும், மூட்டைமுடிச்சோடு கூடவரத் தெம்பில்லை என்றும் சொல்கிறாள். பதறியவனாகப் போகிறான் நன்னையன். செட்டியாரின் வீட்டு வாசல் வரிசையில் ஆண்டிகளோடு உட்காரக் கூச்சப்பட்டு மனம் தவிக்கிறான்; உடல் சுருங்குகிறான் பிச்சைகேட்டுப் பழக்கமில்லாத இந்தப் பஞ்சத்து ஆண்டி. காவித்துணி ஆண்டிகளில் ஒருவன் இவன் யார், என்ன என்று குடைய ஆரம்பிக்க, ஏதோ சொல்லிவிட்டு, இன்னும் சரியாக விடியாத பொழுதில் தானம் கிடைக்க இன்னும் நேரமிருக்கிறது என உணர்ந்து, அங்கிருந்து கிளம்புகிறான். பிள்ளைகளுக்குப் பசி வயிற்றைக் கவ்வுமே.. சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்து நடக்கிறான். ஒரு வீடு தென்படுகிறது. பிச்சைக் கேட்கவும் தெரியாத நம் ஆண்டிக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பை தி.ஜா.வின் எழுத்தில் பாருங்கள்:

பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.

“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.

“ஏனையா அம்மாவைக் கூப்பிடறே? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமேன்னு காத்திருந்தியா, முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?…. என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். ’பதில் சொல்லு சொல்லு’ என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங்கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால், அவன் ஆரம்பிக்கலாம். அவர் நிற்கவில்லை.

“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு – இப்படி வந்து நிக்கிறியே…. உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”

நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது.

தெருவில் விளையாட்டுக் காண்பிக்கும் ஒரு குரங்காட்டியை பார்க்க நேர்கிறது. பேச்சுக்கொடுத்த குரங்காட்டி, நன்னையனது போதாத காலமறிகிறான். அவன் குடும்பத்தோடு உழல்வதைக்கண்டு உதவி செய்ய நினைத்து அவனைக் கூட்டிச்செல்கிறான் சேரிப்பக்கம். பிழைக்க வழிசெய்யவென ஒரு குரங்குக்குட்டியை அவனுக்குக் கிடைக்குமாறு செய்கிறான். ஐயஹோ! நமக்கும் இனி இதுதானா வாழ்க்கை எனக் கூனிக்குறுகி சேரியில் நிற்கிறான் நன்னையன். அவனுக்குத் தைரியம் சொல்லி பழக்கப்பட்ட அந்தக் குரங்குக்குட்டியை கூட்டிப்போய் பிழைத்துக்கொள்ளச் சொல்கிறான் அந்த நல்லமனசுக் குரங்காட்டி.

வாழ்ந்து கெட்ட தனக்கும், தன் குடும்பத்துக்கும் இந்தக் குரங்குக்குட்டியா புதுவாழ்வு தரும் என நம்ப முடியாதவனாகக் குழப்பத்துடன், ஒரு கையில் கம்பும், இன்னொரு கையில் கயிறுமுனைக் குரங்குமாக நகல்கிறான் நன்னையன். என்ன நடந்தது? அவனது பிச்சை வாழ்க்கை சீரானதா?

தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே. தி.ஜானகிராமனின் பஞ்சத்து ஆண்டி.

லிங்க்: https://azhiyasudargal.wordpress.com/2013/12/06/பஞ்சத்து-ஆண்டி-தி-ஜானகிர/

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

தி. ஜானகிராமன்


தமிழின் அதிஅற்புதப் படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்றைப் பார்க்குமுன், அவர்பற்றிய சிறுகுறிப்பு ஒன்றைக் கீழே காண்போம்.

தமிழ் எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவர் தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன். தி.ஜா.வின் எழுத்தைப் பார்க்காமல், அலசாமல் தமிழின் நவீன இலக்கியம்பற்றிப் பேசுவதில், வெறுமனே சிலாகிப்பதில் அர்த்தமேதுமில்லை. நாவல், குறுநாவல், சிறுகதை என இயங்கியவர். பயணக்கட்டுரைகளும் இவரிடமிருந்து வந்திருக்கின்றன. கர்னாடக இசையில் ஆழ்ந்த ஞானமுடையவராதலால், சங்கீதமே எழுத்தாக மாறிய தருணங்களும் உண்டு. எவ்வளவோ சிறப்பிருந்தும், தன் காலகட்டத்திலேயே ஒரு சிறந்த இலக்கியவாதியாக மதிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுமிருந்தும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவராக இருந்தார் அவர். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்ற, தமிழ் இலக்கிய விமரிசகர்களால், இலக்கிய ஆர்வலர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் புதினங்களை இயற்றியவர். இவரது சிறுகதைத் தொகுப்புகளில் அக்பர் சாஸ்திரி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், பாயசம், மனிதாபிமானம், ஒரு துளி துக்கம், எருமைப் பொங்கல் ஆகியவை சில. ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது. அவலும் உமியும், வீடு, ’நாலாவது சார்’ போன்ற குறுநாவல்களையும் இயற்றியவர். காவேரி நதிக்கரையோரம் சென்றுவந்த தன் பயண அனுபவங்களை ‘நடந்தாய் வாழி காவேரி’ என்னும் கட்டுரை நூலாகத் தந்துள்ளார். ஜப்பான், செக்கோஸ்லோவகியா, இத்தாலி, மலேஷியப் பயணங்கள் பற்றியும் நூல்கள் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் தேவக்குடி என்கிற கிராமம் சொந்த ஊர். பள்ளி ஆசிரியராக ஐயம்பேட்டை, கும்பகோணம், குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தன் பணியைத் துவக்கியவர். பின்னர் ’ஆல் இந்தியா ரேடியோ’வில் சேர்ந்து, தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக உயர்ந்து, செவ்வனே பணியாற்றி ஓய்வுபெற்றார். இலக்கிய விமரிசகரும் எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ’சிறுகதை எழுதுவது எப்படி’ என விவாதம் செய்திருந்தார் தி.ஜா. சங்கீதம், நாட்டியம், பயணம் போன்றவை இலக்கியம் தாண்டி இவரை ஈர்த்த மற்ற சங்கதிகள். சமகால எழுத்தாளர்களான தஞ்சை ப்ரகாஷ், கரிச்சான் குஞ்சு, சுவாமிநாத ஆத்ரேயன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரிடம் நெருங்கிய நட்புகொண்டிருந்தார் ஜானகிராமன்.

தி.ஜா.-வின் படைப்புலகம்பற்றி கவிஞர் சுகுமாரன் இப்படிச் சொல்கிறார்: ’தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வுநிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது.’

– அடுத்தாற்போல் கதை ..
*

தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*

விராட் கோஹ்லி 149 !


இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் பௌலிங்கைத் தாங்கமாட்டாமல் ஏற்பட்ட தலைக்குனிவு. முரளி விஜய்யைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மனின் சராசரியும் 40 ஐத் தாண்டவில்லை. அந்தத் தொடரில், நடப்புக் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 13.40. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் திரும்பத் திரும்ப கோஹ்லியை அவுட்டாக்கி அவரது மானத்தை வாங்கிவிட்டார் அப்போது. இத்தகைய நினைவுகளோடுதான் இந்தமுறை இங்கிலாந்தில் நுழையவேண்டியிருந்தது கோஹ்லிக்கு.

இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸிற்கு பதிலாக இந்தியா நேற்று பேட்டிங் செய்தது. கோஹ்லி ஆடவந்தபோது, இந்தியாவின் நிலை பரிதாபம். முதலில் விஜய்யும், ராகுலும், பிறகு தவணும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். 59 க்கு 3 விக்கெட். கோஹ்லியைக் கடித்துத் தின்னத் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்டர்சன். ஒரு பக்கம் ரன்கள் ஏற மறுக்க, இந்திய மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்துகொண்டிருந்தன. 3 ஸ்லிப்புகள், கலி (Gully) என்று நிறுத்திவைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தாக்குதல் நடத்தி கோஹ்லியைத் திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தார் அவரது பரம வைரி ஆண்டர்சன். போறாக்குறைக்கு 20 வயதுப் பொடியன் ஒருவன் 3 இந்திய விக்கெட்டுகளை அனாயாசமான ஸ்விங்கில் சுருட்டி, அவன்பாட்டுக்கு வித்தை காண்பித்துக்கொண்டிருந்தான். ஸாம் கர்ரன் (Sam Curran). ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வேறு இடையே புகுந்து கலக்கிக்கொண்டிருக்க இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. கார்த்திக் அவுட் ஆகையில் இந்திய ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 100 என வயிற்றில் புளியைக் கரைத்தது. விராட் கோஹ்லி தனி ஒரு மனிதனாக எதிர்த்து நிற்பதாகவே தோன்றியது. மூழ்கும் கப்பலின் அப்பாவிக் கேப்டனா?

ஏற்கனவே முடிவுகட்டியே வந்திருந்தார் போலும் கோஹ்லி. விஜய் பாணியில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சீறி எழும் ஆண்டர்சன் பந்துகளை அடிக்காது பின்பக்கம் போகவிட்டார். இடையிடையே ஏதோ தொடப்போய் ஸ்லிப்பிற்கு கேட்ச் பறந்தது. ஆனால், கோஹ்லிக்கோ இந்தியாவுக்கோ அப்போது நல்ல நேரமாக இருந்திருக்கிறது. தொடை உயரத்தில் வந்த கேட்ச்சைப் பிடித்து நழுவவிட்டார் டேவிட் மலான் (David Malan). பிழைத்தார் கோஹ்லி. அதற்குப்பின் வெகுநேரம் கோஹ்லியின் ஸ்கோர் 21-ஐவிட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் கோஹ்லிக்கு கம்பெனி கொடுத்தார். அவர் போனதும் வந்த அஷ்வினை, காலந்தாழ்த்தாது காலி செய்தார் ஆண்டர்சன். 169-க்கு 7 விக்கெட். ம்ஹூம்! தேறாது இந்தியா என்று தெரிந்துவிட்டது. ஆனால் கேப்டன் விடுவதாக இல்லை. தடுத்தாடியும், நெருக்கித்தள்ளியும் சிங்கிளும், இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு கூட ஆடுவது இருக்கட்டும், ஓடக்கூட ஆளில்லை என்றே தோன்றியது. ஏனெனில் இனி வந்தவர்கள் பேட்ஸ்மன்கள் என்று சர்வதேசத் தரத்தில் சொல்ல லாயக்கற்றவர்கள். இந்தியக் கணக்குப்படியேகூட வெறும் பௌலர்கள். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இந்தியாவின் 9, 10, 11-ல் வரும் காகிதப் புலிகள். இவர்களை வைத்துக்கொண்டா கோஹ்லி மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்?

ஷமி விரைவிலேயே வெளியேறிவிட்டார். பின் வந்த இஷாந்த் நிற்பதற்கே தடுமாறினார். தைரியப்படுத்தி, தட்டிக்கொடுத்து, சீறும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு பலியாக்கிவிடாமல் அவரைப் பாதுகாத்து, தானே நிறையப் பந்துகளை எதிர்கொண்டு சாமர்த்தியம் மிகக் காட்டி ஆடினார் கோஹ்லி. இந்த சமயத்தில், ஒரு பக்கமாக கோஹ்லியின்மீது ஆண்டர்சனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தவாறே இருந்தது. எப்படியாவது கோஹ்லியைத் தூக்கி வெளியே வீசாமல் ஆண்டர்சனும் போவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் தன் இன்–ஸ்விங்கர்களைத் தெளித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான நிலையிலும், சந்தடிசாக்கில் அவ்வப்போது பௌண்டரி விளாசியதில், கோஹ்லியின் ஸ்கோர் 70, 80 என மேலேறி வந்துகொண்டிருந்தது. ஆயினும், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கெதிராக, இந்தியாவால் 187 கூட எடுக்க முடியாது எனவே தோன்றியது. இஷாந்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தானும் அவுட்டாகிவிடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆடிய கோஹ்லி, இந்தியாவின் ஸ்கோரை 200-க்கும் தாண்டிக் கொண்டுவந்துவிட்டார். இரண்டு எல்பிடபிள்யூ-க்களில் டிஆர்எஸ்-இல் தப்பித்த இஷாந்த், ரஷீத்தின் பந்தில் வெளியேறினார். அதுவும் உண்மையில் அவுட் இல்லை என ரீப்ளேயில் தெரிந்தது. இந்திய ஸ்கோர் 217. 9 விக்கெட்டுகள் காலி. இருந்தும், கோஹ்லி இன்னும் போய்த்தொலையவில்லையே என இங்கிலாந்தின் எரிச்சல் எகிறியது. தொண்ணூறை நெருங்கிவிட்டிருந்தார் இந்தியக் கேப்டன். சதம் கூட அடித்துவிடுவாரோ?

இந்தியாவின் கடைசி ஆளாக, கையில் மட்டையுடன் வந்து நின்றார் உமேஷ் யாதவ். யாதவிடம் போய்ப்பேசித் தட்டிக்கொடுத்தார். பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தார் கோஹ்லி. இந்தியக் கேப்டனுக்கு, தான் பொறுப்பாக ஆடுவதோடல்லாமல், வேறென்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது மைதானத்தில்? ஃபீல்டர்கள் எனும் பெயரில், கொத்தித் தின்ன இங்கிலாந்துக் கழுகுகள் விழித்துக் காத்திருந்தன. அவர்களுக்குத் தேவை இன்னும் ஒருவிக்கெட். யார் அவுட்டாகித் தொலைந்தால்தான் என்ன? இந்தப் பதற்றத்துக்கு நடுவே இரண்டு பௌண்டரிகளைப் பறக்கவிட்டு, கோஹ்லி சதம் கடந்தார். இந்திய ரசிகர்கள்-அதில் சிலர் கொடி பறக்கவிட்டுக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர்கள், குழந்தைகள் குதூகலித்தனர். அவர் சதத்தைக் கொண்டாடினாரே தவிர, கவனமெல்லாம் உமேஷை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஓட்ட வேண்டும். இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கிவிடவேண்டும் என்கிற சிந்தனைதான். கோஹ்லியை விட்டுவிட்டு, உமேஷை உற்றுப் பார்த்தது இங்கிலாந்து. இதை அறிந்திருந்த கோஹ்லி ஒவ்வொரு ஓவரிலும் முதல் நாலைந்து பந்துகளைத் தானே ஏற்று ஆடினார். ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் சிங்கிள்களை எடுக்கவில்லை. எங்கே உமேஷ் வந்து இந்தப் பக்கம் நிற்க, அவரை ஓரிரண்டு பந்துகளிலேயே காலி செய்துவிடுவார்களோ என்கிற பதற்றம். ஓவரின் ஐந்தாவது அல்லது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த பக்கம் ஓடுவார் கோஹ்லி. அடுத்த ஓவரையும் தானே எதிர் கொள்வார். இப்படி கயிற்றின்மேல் வித்தை காண்பித்துக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே லூஸாக வந்த பந்துகள் அவர் மட்டையை வேகமாகச் சந்தித்து பௌண்டரிக்குப் பறந்தன. அணிக்கு ரன்னும் சேர்த்தாக வேண்டுமே, நின்றால் போதுமா?

இப்படியாகத்தானே, ஒரு சாகஸ ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ஸ்கோரை, 274 வரை கொண்டு வந்து, இங்கிலாந்தைத் திணறவைத்துக் காட்டினார் கோஹ்லி. 149 எனும் இங்கிலாந்துக்கெதிரான தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரில் அவுட்டானார் இந்தியக் கேப்டன். நிச்சயமாக கோஹ்லியின் அதிஜோரான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும். துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் பேர்போன ஒரு தலைவனின் பங்களிப்பு. உமேஷ் யாதவுடனான, பத்தாவது விக்கெட்டுக்கு அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் 57 ரன்கள். அதில் உமேஷின் பங்கு 1 ரன். மிச்சமெல்லாம் கோஹ்லியின் சர்க்கஸ்!

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே இன்னும் 3 நாட்கள் பாக்கி. மேலும் மேலும் விரியும். காட்சிகள் அரங்கேறும். கேப்டனின் இந்த ஒப்பற்ற ஆட்டத்திலிருந்து நமது மற்ற வீரர்கள் ஏதாவது கற்றுக்கொண்டார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

**

உடலோட்டம்


பத்து பதினைந்து தடவை தினம்
பார்க்கைச் சுற்றிவந்தால்
தொப்பை கரையும் எடை குறையும்
துளிர்க்கும் ஆரோக்கியம்
துணையாக ஓடிவரும் என
உடற்தகுதிப் பயிற்சியாளனோ
உன் பக்கத்துவீட்டுக்காரனோ
பகர்ந்திருக்கக்கூடும்
காரணம் இதுதானா, இல்லை –
முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் பெண்ணின்
முதுகோடு சேர்ந்த விஷயங்களில்
முனைப்புக் காட்டுகிறாயா – தெரியாது
பச்சையாய்ப் பரந்து கிடக்கும் பார்க்கில்
பாந்தமாய்க் கால்பதித்து வட்டப்பாதையில்
கச்சிதமாய் உடம்பிருக்கும் அவளோ
காற்றைப்போல மிதந்துசெல்கிறாள்
கட்டையைப்போல் அவள் பின்னே நீ
புஸ் புஸ் என மூச்சுவிட்டு
உருண்டு பிரண்டு செல்வது பார்ப்பதற்கு
நன்றாக இல்லை என நான் நவின்றால்
நன்றாக இருக்காதுதான் கேட்பதற்கு உனக்கு
சுற்று.. சுற்று..
முடிந்தவரை சுற்றிச் சுற்றி வா
வெற்றுத்தனமான வாழ்க்கையில்
வேறென்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது ?

*