கலாபூர்வம் என்றால் என்ன
என்று விளக்க முற்படுகிறார் சோ.தர்மன்
புதுமைப்பித்தனைத் தொட்டுச் சென்று
மா.அரங்கநாதனிடம் மயங்குகிறார்
உணர்வுபூர்வமாக கலாபூர்வத்தில்
உறைந்திருக்கையில்
‘டங்’ என்ற பெருஞ்சத்தம்
இடியாய் விழுந்தது சமையலறையிலிருந்து
பாத்திரம் தற்செயலாகத்தான் விழுந்ததா
இல்லை என்
படிப்புக்கெதிராகவே அதிர்ந்ததா
**