மாதகாலமாக மனதை ஆக்ரமித்திருந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் நேற்று(29-03-2015) மெல்போர்னில்(Melbourne Cricket Grounds, Australia) முடிவுக்கு வந்தது. எத்தனையோ கணிப்புகள், யூகங்கள், எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி, ஆஸ்திரேலியா 5-ஆவது முறையாக உலக சேம்பியன் ஆகிவிட்டது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டி ஒரு லீக் மேட்ச் போல ஆனது ஏமாற்றமே. முதலில் ஆட ஆரம்பித்த நியூஸிலாந்தின், வேகமாக ரன் குவிப்பதற்கு பேர்போன ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) வழக்கம்போல்தான் ஆட முயற்சித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchel Starc) அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தார். His nagging stump-to-stump express deliveries told a different story. அவரை வழக்கம்போல் அடித்து விளையாட முயற்சித்த மெக்கல்லம் முதல் ஓவரிலேயே க்ளீன் போல்ட். இதுவே நியூஸிலாந்தின் ஆரம்ப அதிர்ச்சி. அடுத்துவந்த கேன் வில்லியம்ஸன் (Kane Williamson) விளையாடுகிற மூடிலேயே இல்லை போலிருந்தது. விரைவில் 2 விக்கெட்டுகளை இழந்தும் மார்ட்டின் கப்ட்டிலும் (Martin Guptill) முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும்(Ross Taylor) கவனமான ஆட்டம் ஆட ரன்கள் ஒரு வழியாக வர ஆரம்பித்தன. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹாசல்வுட்(Josh Hazlewood) என பௌலிங்கை ஆரம்பித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க்ளார்க் (Michael Clarke), வேகமாகக் கைவசம் இருந்த பௌலிங் ஆயுதங்களை மாற்றி மாற்றி உபயோகப்படுத்தினார். மிட்செல் ஜான்சனும்(Mitchel Johnson), ஸ்பின்னர் க்ளென் மேக்ஸ்வெல்லும்(Glen Maxwell) விரைவில் இறக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை ஆரம்பமுதலே இறுக்க ஆரம்பித்தது. மேக்ஸ்வெல்லின் சாதாரண, ஸ்பின் ஆகாத முதல் பந்தை கேஷுவலாக அடிக்கப்போய் க்ளீன்போல்ட் ஆனார் துவக்க ஆட்டக்காரரான கப்ட்டில். நம்பிக்கை நட்சத்திரமான க்ராண்ட் எலியட்(Grant Elliott) களமிறங்கினார். தடுமாறிய நியூஸிலாந்தை, டெய்லருடன் சேர்ந்து விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தார். நிதானமான சிங்கிள்களும், அவ்வப்போது நல்ல ஷாட்டுகளுமாக ஆடி ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆஸ்திரேலிய பௌலர்களின் திறமையைத் தன் சாதுர்யமான பேட்டிங்கினால் மழுங்கச்செய்து தான் யார் என்பதை நிறுவி வந்தார் எலியட். டெய்லருடன் சேர்ந்து 110 ரன் என நியூஸிலாந்துக்கு ஒரு கௌரவமான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். Grant Elliot was the only saving grace for New Zealand.
டெய்லர் 40 ரன்களில் அவுட் ஆனவுடன் நியூஸிலாந்துக்குத் வரப்போகும் சோகமுடிவின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. அதிரடியாக ஆடி நியூஸிலாந்தை மீட்கவேண்டிய கோரி ஆண்டர்சனும்(Corey Anderson), ல்யூக் ரோன்க்கியும் (Luke Ronchi) மைதானத்துக்கு வந்தார்கள். ஸ்கோர்போர்டில் முட்டையிட்டு வெளியேறினார்கள். பின்னே நியூஸிலாந்து எப்படி ஆஸ்திரேலியாவைச் சமாளிக்கமுடியும்? பொறுமையுடன் சிறப்பாக விளையாடிய எலியட்டின் விக்கெட்டையும் ஆஸ்திரேலியா ஒருவழியாக வீழ்த்தியது. அவர் 82 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அணிக்குத் தன் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அவர் மட்டும் போதுமா உலகக்கோப்பையை வெல்ல? துண்டைக்காணோம், துணியைக்காணோம் என மற்றவர்கள் ஓட, நியூஸிலாந்து 183-ல் ஆல் அவுட். ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் ஃபாக்னர்(James Faulkner) சிறப்பாக பந்து வீசினார்கள்.
இப்போது ஆஸ்திரேலியாவின் கண்களுக்கருகில் உலகக்கோப்பை தெரிய ஆரம்பித்தது. கொஞ்சம் நிதானமாக ஆடினால் போதும். அதை அவர்கள் செய்தார்கள். நியூஸிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லத்தைப்போல, ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்சும் (Aaron Finch) பூஜ்யத்தில் காலியானார். ஆனால், நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), மேட் ஹென்றி (Matt Henry) சிறப்பாக பந்துவீசியும் வார்னர் 45, கேப்டன் க்ளார்க் 74 என எடுத்துவிட்டனர். ஆஸ்திரேலியாவின் most reliable No.3-ஆன ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) நிதானத்தின் அளவுகோல். பொறுமையாக நின்று ஆடி, ஆஸ்திரேலியாவை வெற்றிபீடத்திற்கு அழைத்துச்சென்றார். 3 பவுண்டரிகளே அடித்து 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாதிருந்தார் அவர்.
உலகக்கோப்பையின் ஃபைனல் மேட்ச், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அதற்கு, எதிர்த்து விளையாடிய நியூஸிலாந்து தாக்குதல் ஆட்டத்தை வழக்கம்போல் வெளிப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அந்த அணியில் 4 பேட்ஸ்மன்களால் பூஜ்யத்தைத் தாண்டமுடியவில்லை. உலகக்கோப்பை ஃபைனலில், ஒரு அணியில் 4 பேர் ’டக்’-அடித்தால் விளைவு என்னாகும்? அதுதான் நடந்தது. அதிகம் முயற்சி செய்யவேண்டிய, சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, கோப்பையை அபேஸ் செய்தது ஆஸ்திரேலியா! ஃபைனலில் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர் அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பையின் தொடர்நாயகன்: வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா).
இந்த உலகக்கோப்பை மீண்டும் நிறுவியிருப்பது தொழில்பூர்வ அணுகுமுறைக்கு, கடும் பயிற்சி, உழைப்புக்கு என்றும் வெற்றிதான் என்பதே. Australia was the most hard-working professional team that was fully focused on winning the Cup. Most deservedly, it has won. சிறப்பான அணியைத் தேர்வு செய்து, தீவிரமாக வெற்றியை நோக்கி உழைத்த, தகுதிமிகுந்த அணியான ஆஸ்திரேலியா வெற்றிக்கனியை சுவைத்தது. நியாயமான நிகழ்வு.
கிரிக்கெட் உலகக்கோப்பை 2015, பல சாதனைகளை முன்வைத்தது. முதன்முறையாக உலகக்கோப்பையில் இரட்டை சதம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு. க்ரிஸ் கேல் (Chris Gayle)(வெஸ்ட் இண்டீஸ்), மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill)(நியூஸிலாந்து). உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மன்: மார்ட்டின் கப்ட்டில் (நியூஸிலாந்து). அதிகபட்சமாக ஒரு பௌலர் வீழ்த்திய விக்கெட்டுகள் 22. சாதனையில் இருவர் பங்குகொள்கின்றனர்: மிட்செல் ஸ்டார்க் (Mitchel Starc) (ஆஸ்திரேலியா), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult)(நியூஸிலாந்து). ஒரு ஃபீல்டரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச கேட்ச்சுகள்: 9 – ரிலீ ரொஸ்ஸோ (Rilee Rossouw) தென் ஆப்பிரிக்கா). பேட்ஸ்மன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்: 26 – க்ரிஸ் கேல்(வெஸ்ட் இண்டீஸ்). ஒருமேட்ச்சில் ஒரு பௌலர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் (10ஓவர்களில்): 7 – டிம் சௌதீ (Tim Southee) (நியூஸிலாந்து). இப்படி நிறைய.
இன்னும் நாலு வருடங்களுக்குப்பின் 2019-ல் வரவிருக்கிறது அடுத்த கிரிக்கெட் உலகக்கோப்பை. நிகழவிருப்பது இங்கிலாந்தில். இந்த உலகக்கோப்பையில் சிறு நாடுகளான (Non-Test playing countries or Associate Members of ICC) அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து போன்ற அணிகளைத் தவிர்க்கவேண்டும்– அதாவது, டெஸ்ட் விளையாடும் 10 வலுவான அணிகள் மட்டுமே உலகக்கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படவேண்டும்- என ஒரு கோரிக்கை, சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலில் விவாதிக்கப்படவுள்ளது. அடுத்த நான்காண்டுகளில், சர்ச்சைக்குரிய ஃபீல்டிங் ரூல் உட்பட சில முக்கியமான விளையாடுமுறை மாற்றங்களும் ஏற்படலாம்.
இந்தியாவும், அடுத்த உலகக்கோப்பைக்கான தீவிர முயற்சிகளில் இப்போதிலிருந்தே இறங்குவது நல்லது. வேகப்பந்துவீச்சுக்கு உகந்த க்ரீன் பிட்ச்சுகள் (green pitches), புதிய, திறமைமிகுந்த வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு, அவர்களுக்கான தொழில்ரீதியான பயிற்சிகள் (professional training facilities) என இந்திய கிரிக்கெட் போர்டு இப்போதிலிருந்தே முனையவேண்டும். தகுந்த ஏற்பாடுகள் மாநில அளவில் செய்யப்படவேண்டும். Long term plans and efficient implementation and execution would be of paramount importance. சரியான தேர்வு, தீவிரப் பயிற்சி, தொழில்பூர்வ அணுகுமுறை (professional approach)- இவற்றிற்கு மாற்று வேறு ஏதுமில்லை.
**