அன்பர்களே! இந்த நள்ளிரவில் இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு மனதில் இனிதே இருத்திக்கொள்ளுங்கள் : புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
வைகுண்ட ஏகாதசி அன்று மங்களகரமாகப் பிறந்துள்ளது 2015. ஆண்டவனின் அருள் அனைத்துயிர்க்கும் வரும் நாட்களில் அபரிமிதமாகக் கிட்டட்டும். வன்முறைகள் – அவற்றின் பரிமாணம் எதுவாக இருப்பினும், குறிப்பாகப் பெண்களுக்கெதிரான வக்கிரங்கள், வன்மங்கள் அடியோடு ஒழிந்திட அவனுடைய கருணை உடனே கிடைக்கட்டும்.
எமது நாட்டிலும், உலகெங்கும் மனிதகுலத்துக்கும், மற்றெல்லா உயிர்க்கும் அமைதி, அன்பு, நல்வாழ்வு அருளி, கால்நீட்டிப் படுத்துக் களித்திடுவாய், காலமெலாம் எமையெல்லாம் படைத்துக் காத்தருள்பவனே, பரந்தாமா !
**
super viji anna. ulagengum amaidhi thazhathida paranthamanana perumalai venduvom
LikeLike
well mr aekaanthan i pray that your dream will come true
LikeLike