நீ மட்டுந்தானா உயர்வாய் சிந்திப்பவன்
நீலனை வானில் தேடிக் கைகூப்புகிறவன்
மரங்களும் செடிகொடிகளும்கூடத்தான்
தலை உயர்த்திப் பார்க்கின்றன
வானத்தை நோக்கியே காலமெலாம் வளர்கின்றன
பலவிதமான பூக்களை உயர உயரமாய் ஏந்தி
பரந்தாமன் ஏற்பான் எனப் பரவசமாய் நிற்கின்றன
பூஜிப்பவன் நீ மட்டும்தான் என நினைத்தாயா !
**
Good one. high standards !!!!
LikeLike
அதானே!
ஏகாந்தன் அண்ணா மனிதன் அதனால்தானே தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையை துவம்சம் செய்கிறான். அதனால்தான் அழிவை நோக்கியும் போய்க்கொண்டிருக்கிறோம்.
நல்ல கருத்து
கீதா..
LikeLike
@ கீதா : அவனால் அழிக்காமல், யாரையும் பழிக்காமல் இருக்கமுடியவில்லையோ !
LikeLike
அதுதான் உண்மை ஏகாந்தன் அண்ணா..
கீதா
LikeLiked by 1 person