நேற்றைய கவிதையின் (அந்தம்) தாக்கம் தொடர,
மேலும் ஒன்று கீழே முளைப்பது தவிர்க்கமுடியாததாகிறது !
ப்ராப்தம்
வெந்ததா .. வேகாததா ..
வெம்மையே போதாததா
என்னதான் சிந்தையோ
வாழ்வெனும் சந்தையோ
முதுகிலே ஆசையின்
முடிவிலா சவாரியோ
முதுமையின் கனவினில்
முறுவலிக்கும் விதியினில்
முக்தியென்றும் மோட்சமென்றும்
மோகம் கூட்டும் வேகமோ?
வெந்ததா.. வேகாததா ..
வெம்மையே போதாததா ?
**