சொந்தபந்தங்களில் யாரும்
என்னைச் சரியாகப் புரிந்துகொண்டவரில்லை
வெகுகாலமாய் அங்கலாய்த்துக்கொண்டிருந்த மனது
திடீரென ஒருநாள் தயங்கி நிறுத்தியது
மௌனவெளியில் கொஞ்சம் நடந்தபின்
இப்படி ஆரம்பித்தது :
உண்மையில் யார் அவர்கள்
எனக்குப் புரிகிறார்களா
தெரியவில்லை
என்னைச் சுற்றி அவர்களும்
அவர்களைச் சுற்றி நானும்
அவ்வப்போது உலவி வருகிறோம்
அவ்வளவே ..
**