நண்பனொருவன்
எப்போதாவது வாய் திறப்பவன்
அன்று ஏதோ ஒரு சுபகணத்தில்
திருவாய் மலர்ந்தான் :
அவ்வப்போது
பின்னோக்கி
திரும்பிப்பார்ப்பது நல்லது
இரண்டு விஷயங்கள் இதில்
ஒன்று –
எத்தனை தூரம் வந்திருக்கிறோம்
எனப் புரிந்துகொள்ள
இன்னொன்று –
ஆரம்பிக்குமுன்
எத்தனைப் புழுதியும் வியர்வையும்
நம்மைப் பூசியிருந்தது
என்பதை மறந்துவிடாதிருக்க..
எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன்
மேலும் சொல்லலானான்
வேகமாகத்தான் பலரும்
சென்றுகொண்டிருக்கிறார்கள்
எதனை நோக்கி என்கிற
தெளிவில்லாமல்
**