இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். விரல் காயம். 15-பேர் கொண்ட இந்திய அணியில், தவனின் இடத்தில், டெல்லியின் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த். ஒரு-நாள் போட்டியில் அப்படியொன்றும் அனுபவம் ரிஷப்-இற்கு இல்லை. வெறும் ஐந்து சர்வதேசப் போட்டிகள். சராசரி 23.2 ரன்கள். எனினும், தவனைப்போல இவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். எதிரி டீமின் ஸ்பின்னர்கள் ஆளநினைக்கும் மிடில்-ஓவர்களில் கடுமையாக எதிர்த்துத் தாக்கும் இயற்கைத்திறன் உள்ள இளம்வீரர். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்ப்பார் என்பது கணிப்பு. ஆஃப்கானிஸ்தானுக்கெதிரான இன்றைய (22-6-19) போட்டியில் ரிஷப் பந்த் இறக்கப்படலாம். ஒருவேளை, நான்காம் இடத்தில் இறங்கப்பட்டால், ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப்-உர்-ரஹ்மான் ஆகிய உலகத் தரமான ஸ்பின்னர்களை எப்படி ஆடுகிறார் என்பது கிரிக்கெட் நிபுணர்கள்/வர்ணனையாளர்களால் கூர்மையாகக் கவனிக்கப்படும்.

சரி, யாருடைய இடத்தில் இவர்? அனேகமாக விஜய் ஷங்கர் அல்லது கேதார் ஜாதவ், ரிஷப்-இற்கு வழிவிடவேண்டியிருக்கும். பாகிஸ்தானுக்கெதிரான ஹை-ஆக்டேன் மேட்ச்சில் ஷங்கரின் பங்களிப்பை மனதில் கொண்டு, அவரை இன்றைய போட்டியிலிருந்து நீக்க, விராட் கோஹ்லிக்கு மனம்வராமல்போகலாம்!
மேலும் மாற்றங்கள் இருக்குமா? இருக்கும். இந்தியாவின் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடாத நிலை. 140+ கி.மீ. -யில் பந்து வீசும் முகமது ஷமி, புவனேஷ்வரின் இடத்தில் புகுந்துகொள்வார். பும்ரா, ஷமி, பாண்ட்யா என்பது அணிக்கு அமையும் ஒரு கூர்மையான வேகப்பந்துவீச்சு.
ரிசர்வ் பெஞ்சில் ஜடேஜாவும், கார்த்திக்கும் பொறுமையாக உட்கார்ந்து உலகக்கோப்பையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய அல்லது அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான போட்டியில் இவர்களில் ஒருவராவது உள்ளே வரவேண்டும். ரிசர்வ் ஆட்டக்காரர்களை அவ்வப்போதாவது மைதானத்திற்குள் இறக்கினால்தான், அவர்களது நம்பிக்கையும் தளராது இருக்கும். டச்சிலும் இருப்பார்கள். நாளைக்கு தேவைப்படுகையில், அவசரமாக அவர்களை உள்ளே இழுக்கமுடியும், என்பதை அறிந்தவர்தான் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி.
இங்கிலாந்துக்கெதிரான கடந்த மேட்ச்சில் ஆஃப்கானிஸ்தான் – குறிப்பாக பௌலர்கள்- கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். ஆஃப்கன் சிறப்பு ஸ்பின்னரான ரஷீத் கானை இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் நொறுக்கித்தள்ளிவிட்டார்கள். அடிபட்ட பாம்பாக ஆஃப்கானிஸ்தான் இன்று சீறக்கூடும். புதிய வீரர்களை டெஸ்ட் செய்வதோடு,இந்தியா கவனத்தோடு விளையாடுவது உத்தமம். நேற்றைய (21-6-19) மேட்ச்சில், வலிமையாகத் தெரிந்த இங்கிலாந்து, ஸ்ரீலங்காவிடம் செமயா உதைபட்டதை, இந்தியா நினைவில் கொள்வது நல்லது.
**
விஜய் சங்கருக்கும் ஏதோ இஞ்சூரி என்று படித்தேன். அவரே விளையாடுவாரா தெரியவில்லை..
LikeLike
@ Sriram: நெட் ப்ராக்டீஸில் ஷங்கருக்கு காலில் அடி. பும்ரா போட்ட யார்க்கர்!
யார் உள்ளே, யார் வெளியே – இன்னும் அரைமணிநேரத்தில் தெரியும்..
LikeLike