காலைநேரத்துக் கவிதைகள்

1. ஒன்றும் அறியாமலே

மொட்டை மாடியின்
சுற்றுச்சுவரின் மேல் நின்று
கரைகிறது காகம்
பக்கத்தில் இருக்கும் தொட்டியில்
உயர்ந்து வளர்ந்திருக்கிறது ரோஜாச் செடி
உன்னதமாய் அதில் ஒரு பூ
ரோஜாவின் மயக்கும் எழில் தெரியுமா
அதன் மணம்தான் அறியுமா
பெரிதாகக் கரைகிறது காகம்

**

2. ஐயய்யோ !

குறுக்கே ஓடுகிறது பூனை
கொஞ்சம் நில்
என்ன நிறமது
ஆ! கருப்பு . .
ஏதோ நடக்கப்போகிறது இன்று
கருப்பாகத்தான் இருக்குமது

**

3 thoughts on “காலைநேரத்துக் கவிதைகள்

Leave a comment