1. ஒன்றும் அறியாமலே
மொட்டை மாடியின்
சுற்றுச்சுவரின் மேல் நின்று
கரைகிறது காகம்
பக்கத்தில் இருக்கும் தொட்டியில்
உயர்ந்து வளர்ந்திருக்கிறது ரோஜாச் செடி
உன்னதமாய் அதில் ஒரு பூ
ரோஜாவின் மயக்கும் எழில் தெரியுமா
அதன் மணம்தான் அறியுமா
பெரிதாகக் கரைகிறது காகம்
**
2. ஐயய்யோ !
குறுக்கே ஓடுகிறது பூனை
கொஞ்சம் நில்
என்ன நிறமது
ஆ! கருப்பு . .
ஏதோ நடக்கப்போகிறது இன்று
கருப்பாகத்தான் இருக்குமது
**
ஒன்றும் அறிய முடியவில்லை என்றுதான் கரைகிறதோ அந்தக் காகம்!
LikeLiked by 1 person
@ஸ்ரீராம்
அப்படியும் இருக்கலாம்தான்!
LikeLike
bro be optimistic ….
LikeLike