ஏன் இப்படி ?

எந்தக் கடவுளின் காதிலும்
தினம் செய்யப்படும்
பிரார்த்தனைகள் விழுவதில்லையா
ஒரு வேளை கேட்க விருப்பமில்லையா
அல்லது அவர்களுக்கு
இதற்கெல்லாம் நேரமில்லையா
மனிதனைப்பற்றிய அக்கறையே
மனதினில் இல்லையா
இறுதியில் இதுதான் என்றால்
இந்த உலகம் தேவைதானா
அதோடு இந்த அசட்டு மனிதரும்
அவர்தம் கையாலாகாக் கடவுளரும்

**

3 thoughts on “ஏன் இப்படி ?

Leave a comment