தொலைந்துபோன கடிதம்

தினமணி 25 ஜனவரி, 2016-இதழில் வெளியான கவிதை:

தொலைந்துபோன கடிதம்

தொலைந்துபோன கடிதமாய் வாழ்க்கை
துவண்டுபோய் நிற்பவனின் தீராத வேட்கை
நினைவுக்கடலின் ஓயாத பெரும் ஓசைகள்
நித்யமாய் அலைபாயும் அடங்காத ஆசைகள்
கைவிட்டு நழுவிய கண நேர வாய்ப்புகள்
காலம் செய்த தாங்கவொண்ணா ஏய்ப்புகள்
கலைந்து போன கனவு இழந்துபோன தூக்கம்
எஞ்சி இருக்கும் வாழ்வின் மாளாத ஏக்கம்

-ஏகாந்தன்

**

3 thoughts on “தொலைந்துபோன கடிதம்

Leave a comment