காலையில் எழுந்ததும்
கடவுளைக் காணவில்லை என்கிறாய்
அருகிலிருக்கும்போது அன்பு செய்யாமல்
வார்த்தைகளால் வடித்தெடுக்காமல்
போனவுடன் புலம்பினால் என் செய்வது
விழித்ததும் முழித்தால் எப்படி
காலையில் எழுந்ததும்
காணவில்லை என்கிறாயே
காலத்திடம்போய் என்னவென்று கேட்பது
இதெல்லாம் ஒன்றும் புரியாதே அதற்கு
**