ஓயாது அவதானித்தவனின்
உணர்ச்சிப் பிரவாகத்தைப்
பின்னிருந்து ரகசியமாய் ரசித்தது
மொழியின் முடிவில்லா வழிமீது
விழிவைத்துப் பார்த்து
எழுதி எழுதி ஏங்கியிருந்தவனை
தோளில் மெல்லத் தொட்டது ஒரு நாள்
கூடவரச் சொல்லிக்
கூட்டிப்போய்விட்டது
காலமுழுதும் தேடிக்கொண்டிருந்த
களைப்பறியாக் கலைஞன்
கிடைத்துவிட்ட திருப்தியில்
காலம்
**
death is not uncertain mr eekanthan
LikeLiked by 1 person