சுஜாதா

ஓயாது அவதானித்தவனின்
உணர்ச்சிப் பிரவாகத்தைப்
பின்னிருந்து ரகசியமாய் ரசித்தது
மொழியின் முடிவில்லா வழிமீது
விழிவைத்துப் பார்த்து
எழுதி எழுதி ஏங்கியிருந்தவனை
தோளில் மெல்லத் தொட்டது ஒரு நாள்
கூடவரச் சொல்லிக்
கூட்டிப்போய்விட்டது
காலமுழுதும் தேடிக்கொண்டிருந்த
களைப்பறியாக் கலைஞன்
கிடைத்துவிட்ட திருப்தியில்
காலம்
**

One thought on “சுஜாதா

Leave a comment