ஆயிரமாயிரம் வன்மங்கள்
வெறுப்புகள் வக்கிரங்கள் தோய்ந்து
வெடித்தெழத் தயாராக எப்போதும்
உள்ளே அந்த இனந்தெரியா மிருகம்
வெளிப்பூச்சாக ஒரே வெளிச்சமயமாக
முகத்தில் முட்டும் சிரஞ்சீவிப் புன்னகை
அன்புத் தேனொழுகும் வார்த்தைப்பந்தல்
பாசமின்னல் பண்புமழை
சந்தேகம் ஏதுமில்லை இவனைப்பற்றி
படிப்பது ராமாயணமேதான் – விடாது
இடிப்பதுதான் பெருமாள் கோவில்
**
hi aekanthaan you are a pessemistic man
LikeLike