என்னென்னவோ சொல்கிறான் மனிதன்
என்னென்னவோ செய்கிறான்
என்னென்னவோ செய்துவிட்டதாகவும்
எண்ணிக்கொள்கிறான்
இன்னும் என்னென்னவோ
செய்தும் விடுவானாம்
எல்லையே இல்லையாம்
அவனுடைய செயல்திறனுக்கு
மாலையில் மெதுவாகக் கீழிறங்கும்
செவ்வாரஞ்சுப் பந்தை
சற்று நேரத்திற்குத்
தன் தலையில் தாங்கி நிற்கிறது
தூரத்துப் பனைமரம்
**
கற்பனை வளம் அருமை!
LikeLike
நன்றி நண்பரே!
LikeLike
let us admit that MANITHAN has done many useful…good things… our younger generation would do more… let us not lose hope mr.AEKANTHAN.
LikeLike
துளசி: ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சார்..
கீதா: வாவ்….செம….சிம்ப்ளி சூப்பர்..எப்படி இப்படி எல்லாம் அசத்தறீங்க….ரசித்தேன்…உங்களின் இந்தக் கவிதை வரிகளை உங்கள் அனுமதியுடன் நான் பாதி எழுதி வைத்திருக்கும் ஒரு கதைக்கு எடுத்துக்கலாமா சகோ…
LikeLiked by 1 person
@ துளசிதரன், கீதா :
@துளசி, @ கீதா: பழையதைப்போய்ப்பார்த்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி.
நான் form -ல் இருக்கும்போது இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்! இதன் கரு காங்கோவின் கின்ஷாசா நகரம். அங்கே எங்கள் வீட்டிலிருந்து மாலையில் மறையும் கதிரவன் துல்லியமாய்த் தெரியும் ஆரஞ்சுப்பந்தாய். தூரத்து பனைமீது சிறிது உட்கார்ந்துவிட்டுப் படுக்கப்போகும்! அதனை ரசித்ததின் போதையே மேலே கண்ட கவிதை.
@ கீதா:
இதென்ன கேள்வி? உங்களுக்கில்லாததா! தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். பாராட்டிக்குளிர்வித்ததற்கு நன்றி.
LikeLike