கோடைப்பாடல்

அடர்பச்சை மரத்தினில்
மஞ்சள்மூக்கு மைனாக்கள்
மனம்விட்டுப் பேசுகின்றன
மயங்கி விளையாடுகின்றன
அனல்பறக்கும் மதியவேளை
அவசரமாய் அணுகுமுன்
கீச்சுமூச்சுப் பாட்டுக்கச்சேரியை
வேகமாய் முடித்துக்கொள்கின்றன
மழை மேகம் கூடிவருமோ
மாதங்கள் பல கழியுமோ
வரப்போகும் துளிகள் விண்ணிலிருந்தோ
வதைபடும் உயிர்களின் கண்ணிலிருந்தோ

**

Leave a comment