சிரிக்கலாம் காலம்

எப்போதும் குலைக்கும் தெருநாய்
எப்போது மூடும் உன் திருவாய்
சட்டெனக் கேட்டுவிட்டான் அவன்
துணுக்கென்றது இவனுக்கு
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
ஆழச் சிந்திக்கையில் அது புரிந்தது
உண்மைதான் அவன் சொன்னதும்
உறவென்றும் அன்பென்றும் பந்தபாசமென்றும்
உணர்த்துவதாய் எண்ணி இவன் பேசுகையில்
உளறுவதாய்த் தோன்றியிருக்கிறது அவனுக்கு
இவனின் புகட்டு மொழிக்கும்
அவனின் பகட்டு வழிக்கும் இடையில்
அன்பினாலும் நிரப்ப முடியாத
அகன்ற பள்ளத்தாக்கு
பாதகம் ஒன்றுமில்லை
பதட்டப்பட ஏதுமில்லை
காலம் ஒன்றும் அதிகமில்லை
கதை முடிந்துவிடும் ஒருநாள்
கிடத்தப்படுவான் இவன் ஒரு மூலையில்
உடனகற்றி அவர்கள் எரிப்பார்கள்
உள்ளுக்குள் கள்ளமாய்ச் சிரிப்பார்கள்

**

Leave a comment